Posts

Showing posts from March, 2021

மாணவர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள் (Student Development Programme on Kanithamizh functions in Python Language)

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறைகளின் கணித்தமிழ்ப் பேரவையின் சார்பாக * மாணவர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - பைத்தான் மொழியில் கணித்தமிழ்ச் செயல்பாடுகள் (Student Development Programme on Kanithamizh functions in Python Language)* எனும் பொருண்மையிலான பயிற்சி 13, 14.4.2021 ஆகிய இரண்டு நாட்கள் 3.00 முதல் 4.00 வரை நிகழ ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் *செ.பழனியம்மாள்* அவர்கள் தலைமையுரை நிகழ்த்துகிறார்கள். பயிற்றுநராகத் திருமிகு *க. சண்முகம்* (உதவிப்பேராசிரியர் & தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர், கணினிப் பயன்பாட்டியல் பொறியியல் துறை, எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, சென்னை) அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியளிக்க உள்ளார். அந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புவோருக்கு மின்சான்றிதழ் உண்டு. இதில் கலந்துகொள்ள பதிவுசெய்தல் வேண்டும். *இறுதி நாள் : 06.4.2021* பதிவுசெய்ய :- https://forms.gle/PH9EqX6EZoorhwL2A

தமிழர் பண்பாட்டு மரபில் கோயிற்கலை

நமது ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி-  தமிழ்த்துறையின் "தமிழர் பண்பாட்டு மன்றம்" சார்பில் "தமிழர் பண்பாட்டில் கோயிற்கலை" (சிறப்புக் கருத்தரங்கம்) எனும் பொருண்மையிலான சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு நம் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமை தாங்கித் தலைமையுரையாற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி அவர்கள் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார். "தமிழர் பண்பாட்டில் கோயிற்கலை" எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு,பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ச.கோகுல் கிருஷ்ணன்  அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். தமிழகம் மற்றும் கொங்குநாட்டுக் கோயில்களின் தனிச்சிறப்புக்களையும், மூலவர் முதல் பரிவார தெய்வங்கள் வரை சுவாமி சிலைகளின் சிறப்பம்சங்களையும், சிற்பம், குடைவரைக் கோயில்கள், குகைக் கோயில்கள், கோபுரம், விமானம் ஆகிய பகுதிகளின் சிறப்பம்சங்களை மிகவும் அருமையாக தெளிவாக விளக்கிக் கூறினார். இந்நிகழ்வு அனைவருக்கும் மிகவும்  அருமையான பயனுள்ள நிகழ்வாக அமைந்தது. பேரா.முனைவர் ம.மைதிலி அவர்...

இணையமும் தமிழும்

27.03.2021 இன்று முகிழம் தமிழ் இலக்கிய மன்றம் மற்றும் வாசிப்பு முற்றம் இணைந்து நடத்தும் வாராந்திரக் கூடுகை 7 ம் நிகழ்விற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். இணையமும் தமிழும் என்ற பொருண்மையில் முனைவர் த. சத்தியராஜ் உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் அவர்கள் உரையாற்றுகிறார். நமது கல்லூரி மாணவ மாணவிகளின் திருக்குறள் மற்றும் கவிதை வாசிப்பு, கைவினைக் காட்சிகள் இடம் பெறும். நேரம் 12.00 மணி இணைப்பு : https://meet.google.com/mxf-mkty-ygz  அனைவரும் வருக!

கணித்தமிழ் – தோற்றம், வளர்ச்சி

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியின் கணித்தமிழ் மன்றம்  சார்பாக *கணித்தமிழ் – தோற்றம், வளர்ச்சி* எனும் பொருண்மையிலான இணையவழித் திறனறித் தேர்வு 27.03.2021 முதல் 28.03.2021 வரை நிகழ ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. இத்திறனறிவுத் தேர்வில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப் பெறுகின்றது.   *  *மின்சான்றிதழ் உண்டு* *  *50% மதிப்பெண் பெறுதல் வேண்டும்* * *அதற்குரிய திறனறிதல் தேர்வுப் படிவம் இது🏿* https://forms.gle/XKG2WsUQ7GA28FV78

கொங்குநாடும் தொல்லியலும்

நமது ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி-  தமிழ்த்துறையின் "தொல்லியல் மன்றம்" சார்பில் "கொங்குநாடும் தொல்லியலும்" (கொங்குநாட்டு தொல்லியல் பதிவுகள்) எனும் பொருண்மையிலான சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்க நிகழ்வை தமிழ்த்துறைப் பேராசிரியர் அ.சுமதி  அவர்கள் வரவேற்புரை வழங்கித் தொடங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு நம் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமை தாங்கித் தலைமையுரையாற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி அவர்கள் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார். "கொங்கு நாடும் தொல்லியலும்" எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, பிரபல தொல்லியல் ஆய்வாளர், தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர், முனைவர் நித்தியானந்த பாரதி  அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். தமிழகத் தொல்லியலில் கொங்குநாட்டின் பெரும்பங்கு எத்தகையது என்பது பற்றியும், கொங்குநாட்டின் பண்டைய கால வாணிபம், பெருவழிகள், நாணயங்கள், கல்வெட்டுகள், சித்திரங்கள், கைவினைப் பொருட்கள், சுடுமண் சிதைகள், கோவில்கள், சிற்பங்கள், மற்றும் கொங்குநாட்டு மக்க...

உலக மகிழ்ச்சி தினம்

"உலக மகிழ்ச்சி தினம்" நமது ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி-  தமிழ்த்துறையின் சிரிப்போம் சிந்திப்போம் மன்றம் சார்பில் உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு நம் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமை தாங்கி, நிகழ்வைத் தொடங்கி வைத்தார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி அவர்கள் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார். "மாற்றுக்குரல் மகா சங்கமம்" எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, பிரபல தொலைக்காட்சி புகழ் மிமிக்கிரி கலைஞர் ஆ.ஆனந்தாழ்வார் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடித்த பல சாதனை நட்சத்திரங்களின் குரல்களில் கொரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை நகைச்சுவை வாயிலாகக் கூறி அனைவரையும் மகிழ்வித்தார்... தமிழ்த்துறைப் பேராசிரியர் கா.விக்னேஷ் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்விற்கு ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பித்தனர்.

சங்கத் தமிழ் தேடு

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறைகளின் கணித்தமிழ்ப் பேரவையின் சார்பாக *சங்கத் தமிழ் தேடு குறுஞ்செயலி உருவாக்க முறைகள் (Workshop on Search Sangam Thamizh App Development methods)* எனும் பொருண்மையிலான நிகழ்வு 21. 3. 2021 அன்று முற்பகல் 8.30 முதல் 9.30 வரை நிகழ ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் *செ.பழனியம்மாள்* அவர்கள் தலைமையுரை நிகழ்த்துகிறார்கள். பயிற்றுநராகத் திருமிகு *கந்தையா பாலசிங்கம்* (தொழில்நுட்பவியல் வல்லுநர், ஒட்டவா, கனடா) அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியளிக்க உள்ளார். அந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புவோருக்கு மின்சான்றிதழ் உண்டு. அதற்குரிய பதிவுப் படிவம் :- https://forms.gle/3oD7g94TYsbZgLG28

பெண்ணே

காலையில் கதிரவன் உதிக்கும்முன் கடாரம் கொண்ட போரொலி காதை நிரப்ப கழுவுவாள் பாத்திரங்களை அடுமனைக்குள் அமைதியாக தாய்வழிச் சமுதாயம் தந்தைவழிச் சமுதாயமாய் மாறியதன் வெளிப்பாடு கொற்றவையை வறுமைக்குள் காட்சிப்படுத்துவர் தாழ்வு எண்ணம் கொண்டார் தவிடு பொடியாய்ப் பேசுவர் தாமிரத் தொண்டை கிழிய பெண்ணியம் கூறி அடுத்த நாழிகை அழகு பதுமையாக அடுத்தவர்முன் நிற்பதே அவருக்கு அழகு அவர்களது எண்ணம். காலம் கடந்து சென்றாலும் காட்சிகள் மாறினாலும் ஆழ்மனதிற்குள் பதிந்த அடிமையிலிருந்து விடுபட மனம் தயங்கும் ஆகா.... ஆகா..... படித்தும் பட்டம் பெறும் பரப்புரை செய்வது ஏனோ அடுத்தவர் அந்தரங்கத்தை அதிலொரு ஆட்சி அவர்களுக்கு ஆனால் அனைத்துத் துறைகளில் ஆட்சியைப் பிடித்தாலும் அடிமை மோகம் மட்டும் அடிக்கொரு முறை வந்து வந்து ஞாயிறு ஒளிர்வதாய் ஒளி பாய்ச்சிச் செல்கிறது நிற்க பெண்ணே அகண்ட உலகை அறிவால் விழுங்கு ஆறறிவு அறி ஆற்றல்சால் சிந்தை ஆக்கு கண்டோர் அலர் நீக்கு படி அனுதினமும் கல் கண்டதை...                                           -...